Featured news thumbnail

10th பிப் 2025

மருத்துவமனை கட்டமைப்பை மருத்துவம் மற்றும் சுகாதார சேவைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தாமல், நோயாளிகள் மனரீதியாக குணமடையும் இடமாக மாற்ற வேண்டும் என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் தெரிவித்தார்.

பிம்புரா ஆதார மருத்துவமனையில் தற்போது மூடப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவப் பிரிவு கட்டிடத்தை உடனடியாகப் புதுப்பித்து சேவைகளைத் தொடங்க இதன்போது அறிவுறுத்தப்பட்டது.
மருத்துவமனை அமைப்பை மேம்படுத்துவதில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, மருத்துவமனைக்கு வருகை தரும் நோயாளிக்குத் தேவையான மன சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும், மருத்துவமனை என்பது படுக்கை, மருந்து, தடுப்பூசி மற்றும் சுகாதார சேவையாக மட்டுமல்லாமல், நோயாளிக்கு மனரீதியாக சிகிச்சை அளிக்கும் இடமாகவும் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

மீளவும் செய்திக்கு